செய்திகள்

ஒரே நேர தேர்தலுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாங்க ரூ.4,555 கோடி தேவை - சட்ட கமிஷன் தகவல்

Published On 2018-09-03 18:47 GMT   |   Update On 2018-09-03 19:34 GMT
பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுமானால் ரூ.33,200 செலவாகும் என சட்ட கமிஷன் தெரிவித்துள்ளது. #LawPanel #SimultaneousPolls
புதுடெல்லி:

பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பாக சட்ட கமிஷன் தனது வரைவு அறிக்கையை கடந்த வாரம் வெளியிட்டது. இதில் ஒரே நேர தேர்தலுக்கு தேவைப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பற்றியும் கட்ட கமிஷன் கூறியிருந்தது.

அது குறித்து சட்ட கமிஷன் தனது அறிக்கையில், ‘பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுமானால், 12.9 லட்சம் வாக்குப்பதிவு அலகுகள், 9.4 லட்சம் கட்டுப்பாட்டு அலகுகள் மற்றும் 12.3 லட்சம் ஒப்புகைச்சீட்டு வழங்கும் அலகுகள் கூடுதலாக தேவைப்படுவதாக தேர்தல் கமிஷன் தெரிவித்து இருக்கிறது. இந்த 3 அலகுகளும் சேர்ந்த வாக்குப்பதிவு எந்திரம் ஒன்றுக்கு ரூ.33,200 செலவாகும். அந்தவகையில் புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்காக ரூ.4,555 கோடி தேவைப்படுகிறது’ என்று கூறப்பட்டு இருந்தது.

இதைப்போல அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கு 10 லட்சத்து 60 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் கூறியதாகவும் சட்ட கமிஷன் தனது வரைவு அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. #LawPanel #SimultaneousPolls 
Tags:    

Similar News