செய்திகள்

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் பிரதமர் ஆவார் - மகன் நம்பிக்கை

Published On 2018-09-03 07:42 GMT   |   Update On 2018-09-03 07:42 GMT
தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவிடம் நாட்டையே வழிநடத்தி செல்லும் திறமை இருப்பதால் பிரதமர் ஆவார் என்று அவரது மகனும், மந்திரியுமான தரகா ராமராவ் கூறியுள்ளார். #ChandrashekarRao
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி அரசு அமைந்து 4½ ஆண்டுகள் ஆவதையொட்டி ஐதராபாத்தில் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகளை சேகரிக்க டெல்லியில் இருந்து தனியாக பத்திரிகையாளர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகனும், மந்திரியுமான தரகா ராமராவ் பேட்டி அளித்தார்.

தெலுங்கானா மாநிலத்தில் எங்களது கட்சி மிக வலுவாக உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 17 இடங்களில் 15 இடங்களை நாங்கள் கைப்பற்றுவோம். அதேபோல 119 சட்டமன்ற தொகுதிகளில் 109 இடங்களை கைப்பற்றுவோம்.


எனது தந்தை சந்திரசேகர ராவ் முதல்-மந்திரியாக இருந்து யாரும் செய்ய முடியாத பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். 4½ ஆண்டுகளில் இந்த சாதனைகளை செய்திருப்பது மிகப்பெரிய செயலாகும்.

மாநிலத்தை மட்டுமல்ல நாட்டையே வழிநடத்தி செல்லும் திறமை அவரிடத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அவர் பிரதமராக ஆவதற்கு வாய்ப்பு உள்ளது.

ஏன் என்றால் மாநில அளவில் செயல்படும் பல கட்சிகள் பாரதிய ஜனதாவையும் விரும்பவில்லை, காங்கிரசையும் விரும்பவில்லை. அவர்கள் அனைவரும் ஒரு கூட்டணியை உருவாக்கி ஆட்சி அமைக்கலாம். அப்படி ஒரு ஆட்சி வருவதாக இருந்தால் சந்திரசேகரராவ் பிரதமராக வருவார்.

அப்படி அவர் பிரதமர் ஆனால் பல்வேறு வித்தியாசமான தொலைநோக்கு திட்டங்களை அவர் கொண்டு வருவார். ஏற்கனவே மாநிலத்தில் இதேபோல அவர் திட்டங்களை செயல்பட்டு சாதித்திருக்கிறார்.

பிரதமர் மோடி மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார். காங்கிரஸ் கட்சி எப்போதோ மக்கள் நம்பிக்கையில் இருந்து விலகிவிட்டது. நாட்டுக்கு இப்போது புதிய தலைமை தேவை. அதை சந்திரசேகர ராவ் செயல்படுத்துவார்.

இவ்வாறு அவர் கூறினார். #ChandrashekarRao #KTRamaRao
Tags:    

Similar News