செய்திகள்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரம் உயர்ந்துள்ளது - அருண் ஜெட்லி

Published On 2018-08-30 13:26 GMT   |   Update On 2018-08-30 13:26 GMT
பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்துள்ளதாக மத்திய மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். #ArunJaitley #Demonetisation #BJP #PMModi
புதுடெல்லி:

2016-ம் ஆண்டு பாஜக அரசால் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை இன்று வரை சர்ச்சைக்கும், விமர்சனத்துக்கும் உள்ளாகி வருகிறது. கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த அறிவிப்பு என கூறப்பட்டபோதிலும், தற்போது சுமார் 93% மதிப்பிழப்பு செய்யப்பட்ட பணம் ரிசர்வ் வங்கிக்கு திரும்ப பெறப்பட்டது என்ற தகவல் மூலம் மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தின் மீதான தாக்குதல் என விமர்சித்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மத்திய மந்திரி அருண் ஜெட்லி, கருப்பு பணத்தை தடுப்பது, வருமான வரி தாக்கலை அதிகரிப்பதே பணமதிப்பு நீக்கத்தின் நோக்கமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் உயர்ந்துள்ளதாகவும், வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 6.86 கோடியாக உயர்ந்துள்ளதே அதற்கு சாட்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார். #ArunJaitley #Demonetisation #BJP #PMModi
Tags:    

Similar News