செய்திகள்

திருப்பதி மலை பள்ளத்தாக்கில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு

Published On 2018-08-21 09:35 GMT   |   Update On 2018-08-21 09:35 GMT
குடும்ப பிரச்சனை காரணமாக திருப்பதி மலை பள்ளத்தாக்கில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போலீசார் மீட்டனர்.
திருமலை:

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் ஜக்கியா பேட்டையை சேர்ந்தவர் நீரா கல்யாண்.

குடும்பப் பிரச்னை காரணமாக நேற்று காலை 10 மணிக்கு அவர், தற்கொலை செய்து கொள்ளப்போவதாக செல்பி வீடியோ மூலம் போலீசாருக்கு தகவல் அனுப்பி பின்னர் மாயமாகி விட்டார்.

செல்பி வீடியோவை ஆய்வு செய்த போலீசார் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் வழியில் நடைபாதை அருகே உள்ள அவாச்சாரி கோனை பள்ளத்தாக்கில் அவர் தற்கொலைக்கு முயன்றதை அறிந்து அங்கு தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர், தீயணைப்பு படையினர் உதவியுடன் இளம்பெண்ணை தேடினர்.

5 மணி நேரம் தீவிர தேடலுக்குப் பின்னர் பள்ளத்தாக்கில் 60 அடி ஆழம் உள்ள இடத்தில் காயங்களுடன் நீராகல்யாணி மயங்கிக்கிடந்தார். மரங்களில் சிக்கியதால் அவர் உயிர் பிழைத்தார்.

அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News