செய்திகள்

ஆம் ஆத்மியில் இருந்து மூத்த தலைவர் அசுதோஸ் விலகல்

Published On 2018-08-15 22:43 GMT   |   Update On 2018-08-15 22:43 GMT
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் அசுதோஸ். இவர் நேற்று திடீரென கட்சியில் இருந்து விலகினார். #AAP #Ashutosh #Resign
புதுடெல்லி:

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் அசுதோஸ். இவர் நேற்று திடீரென கட்சியில் இருந்து விலகினார். முழுக்க முழுக்க தனிப்பட்ட காரணத்துக்காக தான் கட்சியில் இருந்து வெளியேறுவதாக அவர் கூறினார்.

இது குறித்து அசுதோஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் “அனைத்து பயணத்துக்கும் ஓர் முடிவு உண்டு. ஆம் ஆத்மி கட்சி உடனான எனது தொடர்பு அழகானது மற்றும் புரட்சிகரமானது. முற்றிலும் தனிப்பட்ட காரணத்துக்காக நான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன். கட்சிக்கும், எனக்கு முழு ஆதரவு அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்” என குறிப்பிட்டுள்ளார்.



பத்திரிகையாளராக இருந்து அரசியலுக்கு வந்த அசுதோஸ் 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டதும், அந்த தேர்தலில் அவர் தோல்வியை தழுவியதும் நினைவு கூரத்தக்கது.  #AAP #Ashutosh #Resign
Tags:    

Similar News