செய்திகள்
ரூபாயை சீனாவில் அச்சடிக்க ஒப்பந்தம் என்ற சீன ஊடக செய்தி தவறானது - மத்திய அரசு
இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க சீன அரசு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளதாக சீன ஊடகத்தில் வெளியான செய்தியை நிதி அமைச்சகம் மறுத்துள்ளது. #IndianCurrency #RBI #China #Congress
புதுடெல்லி:
சீனாவில் இருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்றில், ‘இந்தியா, நேபாளம், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுடன் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சீன ரூபாய் நோட்டு அச்சடிப்பு கார்பரேஷனின் தலைவர் லியூ குயிஷெங் பேட்டியளித்திருந்தார்.
இந்த செய்தியை மேற்கோள் காட்டி காங்கிரஸ் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தது. இந்நிலையில், சீன ஊடகத்தில் வெளியான செய்தி தவறானது என நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார்.
இந்திய ரூபாய்கள் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கீழ் உள்ள அச்சகங்கள் மூலமே அச்சடிக்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.