செய்திகள்
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததை அடுத்து பிரதமர் மோடி அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். #RIPKalaignar
புதுடெல்லி:
திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு காரணமாக காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று மாலை 6.10 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இதையடுத்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் செய்தியில் இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி மறைந்த செய்தி மிகவும் சோகத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதேபோல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திரு.கருணாநிதி அவர்களின் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். கலைஞர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நம் வாழ்வில் வல்லமைமிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார். எனது ஆழ்ந்த இரங்களை அவரது குடும்பத்தாருக்கும், மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என்பதாக குறிப்பிட்டுள்ளார். #RIPKalaignar
திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு காரணமாக காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று மாலை 6.10 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இதையடுத்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் செய்தியில் இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி மறைந்த செய்தி மிகவும் சோகத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதேபோல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திரு.கருணாநிதி அவர்களின் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். கலைஞர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நம் வாழ்வில் வல்லமைமிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார். எனது ஆழ்ந்த இரங்களை அவரது குடும்பத்தாருக்கும், மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என்பதாக குறிப்பிட்டுள்ளார். #RIPKalaignar