செய்திகள்

குடியிருப்போர் விவகாரம்: வரைவு பதிவேடு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக்கூடாது - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2018-07-31 20:56 GMT   |   Update On 2018-07-31 20:56 GMT
அசாமில் குடியிருப்போர் விவகாரம் தொடர்பாக வரைவு பதிவேடு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக்கூடாது என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #AssamNRC #SupremeCourt
புதுடெல்லி:

அசாம் மாநிலத்தில் வசிப்போர் பற்றிய தேசிய குடிமக்கள் இறுதி வரைவு பதிவேடு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பேர் அசாமை சேர்ந்தவர்கள் அல்ல என்பதும் இவர்கள் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக அசாமில் குடி புகுந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.

இந்த நிலையில், அசாம் குடிமக்கள் பதிவேட்டின் ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜெலா நேற்று முன்தினம் இறுதி வரைவு பதிவேட்டின் தற்போதைய நிலை குறித்து விரிவான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். இதன் மீது நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் ஆர்.எப்.நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரணை நடத்தியது.



அப்போது நீதிபதிகள் கூறுகையில், “வரைவு இறுதி பதிவேடு தொடர்பாக மத்திய அரசு நிலையான இயக்க நடைமுறையை உருவாக்கி அதை கோர்ட்டின் ஒப்புதலுக்காக வருகிற 16-ந் தேதி தாக்கல் செய்யவேண்டும். மேலும், விடுபட்டு உள்ளவர்களின் பெயர்களை சேர்க்க மற்றும் இது தொடர்பான ஆட்சேபங்களை தெரிவிக்க உள்ளூர் பதிவாளர் ஒருவர் மூலம் நோட்டீஸ் அளிக்கப்படவேண்டும். இந்த பதிவேடு தொடர்பாக கட்டாய நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது. ஏனென்றால் இது வெறும் ஒரு வரைவு பதிவேடுதான்” என்று உத்தரவிட்டனர்.  #AssamNRC #SupremeCourt
Tags:    

Similar News