செய்திகள்

ஜம்முவில் மோர்டர் குண்டு வெடித்து ஒருவர் பலி

Published On 2018-07-27 15:06 IST   |   Update On 2018-07-27 15:06:00 IST
ஜம்மு பகுதியில் சர்வதேச எல்லைப்பகுதியில் பழைய மோர்டர் ரக குண்டு வெடித்ததில் அங்கு பணியில் இருந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். #JammuKashmir
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லைக்கோடு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அடிக்கடி துப்பாக்கியால் சுட்டும், மோர்டார் ரக குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் அவர்களுக்கு உரிய வகையில் பதிலடி தந்துவருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு மாநிலம் ஆர்னியா எல்லைக்கோட்டுப் பகுதி அருகே ஜபோவால் பகுதியில் இன்று சிலர் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது மண்ணுக்கு அடியில் புதைபட்டிருந்த ஒரு மோர்டார் குண்டு எதிர்பாராத வகையில், பயங்கரமாக வெடித்து சிதறியது.



இதில் ஒரு விவசாய தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார். 6 பேர் காயம் அடைந்தனர். பாகிஸ்தான் ராணுவத்தினர் முன்னர் சில வேளைகளில் நடத்திய தாக்குதலின் போது இந்திய எல்லையை நோக்கி வீசப்பட்ட மோர்டார் குண்டு இந்த வயல்வெளிப் பகுதியில் புதையுண்டு இருக்கலாம். இன்று வயல்வேலையின் போது கூரிய ஆயுதம் பட்டதில் அந்த பழைய குண்டு வெடித்து சிதறி இருக்கலாம் என கருதப்படுகிறது. #JammuKashmir
Tags:    

Similar News