ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 16.12.2025 - இந்த ராசிக்காரர்களுக்கு முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள்

Published On 2025-12-16 07:37 IST   |   Update On 2025-12-16 07:37:00 IST
  • இன்றைய ராசிபலன்
  • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

உடன்பிறப்புகள் உறுதுணையாக இருக்கும் நாள். உள்ளம் மகிழும் செய்தி அதிகாலையிலேயே வந்து சேரும். பற்றாக்குறை தீர்ந்து பணவரவு கூடும். தொழில் வளர்ச்சி உண்டு.

ரிஷபம்

மனக்குழப்பம் அகலும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

மிதுனம்

திடீர்ப் பயணத்தால் தித்திப்பான செய்தி வந்து சேரும் நாள். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு.

கடகம்

சேமிப்பு கரைகின்றதே என்று சிந்திப்பீர்கள். மற்றவர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் உங்களிடமே திரும்பி வரலாம். விரயங்கள் அதிகரிக்கும் நாள்.

சிம்மம்

வரவு திருப்தி தரும் நாள். செயல்திறன் மிக்கவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். பூமிவாங்கும் எண்ணம் உருவாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

கன்னி

முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். முன்னேற்றப்பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வழக்குகள் சாதகமாகும்.

துலாம்

வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும் நாள். வாகன மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். தொழில் வளர்ச்சிக்குப் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

விருச்சிகம்

யோகமான நாள். பிரபலங்களின் சந்திப்பு கிட்டும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பூர்வீக சொத்துத்தகராறுகள் அகலும்.

தனுசு

இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும் நாள். அடுத்தவர் நலன்கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.

மகரம்

மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வியாபார விரோதம் அகலும். கடன்பிரச்சனைகளைச் சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும்.

கும்பம்

சந்தோஷ வாய்ப்புகளைச் சந்திக்கும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். இடம், பூமியால் லாபம் உண்டு.

மீனம்

வரவை விடச் செலவு கூடும். உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்டைத்த பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழிலில் குறுக்கீடுகள் அதிகரிக்கும்.

Tags:    

Similar News