செய்திகள்

ரூ.4,300 கோடி பினாமி சொத்துகள் முடக்கம் - மாநிலங்களவையில் மத்திய மந்திரி தகவல்

Published On 2018-07-25 05:13 IST   |   Update On 2018-07-25 05:13:00 IST
ரூ.4 ஆயிரத்து 300 கோடி பினாமி சொத்துகளை முடக்கி அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய நிதி இணை மந்திரி பிரதாப் சுக்லா தெரிவித்தார். #BenamiProperties #ShivPratapShukla
புதுடெல்லி:

நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய நிதி இணை மந்திரி பிரதாப் சுக்லா எழுத்துப்பூர்வமாக நேற்று அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-

பினாமி சொத்துகளை கண்டறிந்து முடக்குவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பினாமி பரிமாற்ற நடவடிக்கைகளை வருமான வரித்துறையும் 24 மணி நேரமாக தீவிரமாக கண்காணித்து வருகிறது.

கடந்த ஜூன் 30-ந் தேதி வரை 1,600 பினாமி பரிமாற்றங்கள் கண்டறியப்பட்டன. இதன் மூலம் ரூ.4 ஆயிரத்து 300 கோடி பினாமி சொத்துகளை முடக்கி அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். #BenamiProperties #ShivPratapShukla #tamilnews 
Tags:    

Similar News