செய்திகள்

மகாராஷ்டிராவில் லேசான நில அதிர்வு - மக்கள் அச்சம்

Published On 2018-07-13 20:43 GMT   |   Update On 2018-07-13 20:43 GMT
மகாராஷ்டிராவில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு லேசான நில அதிர்வு உணரப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். #Thane #MildTremors
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் லேசான நில அதிர்வுகள் உணரப்பட்டது. டோம்பிவிலி, கல்யாண், உல்லாஸ்நகர் மற்றும் பிவண்டி உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.  

இதனால் வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.சிறிது நேரம் கழித்து நிலைமை சீரானதும் அவர்கள் மீண்டும் வீடுகளுக்கு திரும்பினர்.

இது தொடர்பாக பேரிடர் மேலாண்மை மைய அதிகாரிகள் கூறுகையில், மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டது.  இது சுமார் 2.4 ரிக்டர் அளவில் பதிவானது. இதனால் சேதம் ஏற்படவில்லை எனதெரிவித்தனர்.
Tags:    

Similar News