செய்திகள்
ராணுவ வீரர்களின் தியாகத்தை வைத்து பா.ஜ.க அரசியல் செய்கிறது - காங். குற்றச்சாட்டு
சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்ற ராணுவ நடவடிக்கைகளை, அரசியல் ஆதாயத்திற்காக பாரதிய ஜனதா கட்சி பயன்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. #surgicalstrike
புதுடெல்லி :
காஷ்மீரில் ஊடுருவிய பயங்கரவாதிகள் உரி பகுதியில் நடத்திய திடீர் தாக்குதலில் 17 வீரர்கள் உயிரிழந்தனர். இந்தியா இதற்கு பதிலடி கொடுக்கும் என பிரதமர் மோடி எச்சரித்ததை தொடர்ந்து, கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் இந்திய வீரர்கள் புகுந்து நடத்திய அதிரடி தாக்குதலில் அங்கிருந்த 7 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது.
இந்த தாக்குதல் சம்பவம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு, அதற்கான ஆதாரங்கள் அடங்கிய வீடியோ வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் சென்று இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தியயது என இந்தியா அதிகாரப்பூர்வமாக தெரிவித்தும், பாகிஸ்தான் அரசு அதை தொடர்ந்து மறுத்து வந்த நிலையில் இந்திய ராணுவத்தின் உதவியுடன் இந்த வீடியோக்கள் நேற்று வெளியாகியுள்ளன.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் செய்திதொடர்பாளர் ரன்தீப் சுர்ஜீவாலா பேசுகையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-
பா.ஜ.க அரசு வாக்குகளுக்காக ராணுவ வீரர்களின் ரத்தத்தையையும் தியாகத்தையும் வைத்து அரசியல் பிரச்சாரம் செய்யும் போக்கை ஏற்றுக்கொள்ள முடியாது. சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடவடிக்கைகளை உத்திரப்பிரதேச சட்டசபை தேர்தல் அரசியலுக்கு கடந்த 2017-ம் ஆண்டு பா.ஜ.க பயன்படுத்தியது. அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜ.க தற்போது சர்ஜிக்கல் ஸ்டிரைக் வீடியோக்களை மீண்டும் வெளியிட்டுள்ளது.
ஒருபக்கம், ராணுவத்தின் வெற்றியை மட்டும் தங்களது வெற்றியாக பாவித்துக்கொள்ளும் அரசு , மறுபக்கம் சரிவர ராணுவத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாததால் இந்த அரசு பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இயலாமை நிலையில் உள்ளது. இதன் காரணமாக இந்த ஆட்சியில் அதிகப்படியான ராணுவ வீரர்கள் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த அரசு, சர்ஜிக்கல் ஸ்டிரைக் வீடியோக்களை வெளியிட்டதன் மூலம் நமது பாதுகாப்பு அமைப்பிற்கு ஆபத்தை உண்டாக்குகிறதா? ரகசிய நடவடிக்கைகளின் ஆதாரத்தை பொதுவெளியில் வெளியிட்டு வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த முயல்கிறதா? பா.ஜ.க.வினர் தேர்தலில் வாக்குகளை பெற வீரர்களை அரசியல் தீவனமாக பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். #surgicalstrike
காஷ்மீரில் ஊடுருவிய பயங்கரவாதிகள் உரி பகுதியில் நடத்திய திடீர் தாக்குதலில் 17 வீரர்கள் உயிரிழந்தனர். இந்தியா இதற்கு பதிலடி கொடுக்கும் என பிரதமர் மோடி எச்சரித்ததை தொடர்ந்து, கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் இந்திய வீரர்கள் புகுந்து நடத்திய அதிரடி தாக்குதலில் அங்கிருந்த 7 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது.
இந்த தாக்குதல் சம்பவம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு, அதற்கான ஆதாரங்கள் அடங்கிய வீடியோ வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் சென்று இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தியயது என இந்தியா அதிகாரப்பூர்வமாக தெரிவித்தும், பாகிஸ்தான் அரசு அதை தொடர்ந்து மறுத்து வந்த நிலையில் இந்திய ராணுவத்தின் உதவியுடன் இந்த வீடியோக்கள் நேற்று வெளியாகியுள்ளன.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் செய்திதொடர்பாளர் ரன்தீப் சுர்ஜீவாலா பேசுகையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-
பா.ஜ.க அரசு வாக்குகளுக்காக ராணுவ வீரர்களின் ரத்தத்தையையும் தியாகத்தையும் வைத்து அரசியல் பிரச்சாரம் செய்யும் போக்கை ஏற்றுக்கொள்ள முடியாது. சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடவடிக்கைகளை உத்திரப்பிரதேச சட்டசபை தேர்தல் அரசியலுக்கு கடந்த 2017-ம் ஆண்டு பா.ஜ.க பயன்படுத்தியது. அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜ.க தற்போது சர்ஜிக்கல் ஸ்டிரைக் வீடியோக்களை மீண்டும் வெளியிட்டுள்ளது.
ஒருபக்கம், ராணுவத்தின் வெற்றியை மட்டும் தங்களது வெற்றியாக பாவித்துக்கொள்ளும் அரசு , மறுபக்கம் சரிவர ராணுவத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாததால் இந்த அரசு பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இயலாமை நிலையில் உள்ளது. இதன் காரணமாக இந்த ஆட்சியில் அதிகப்படியான ராணுவ வீரர்கள் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த அரசு, சர்ஜிக்கல் ஸ்டிரைக் வீடியோக்களை வெளியிட்டதன் மூலம் நமது பாதுகாப்பு அமைப்பிற்கு ஆபத்தை உண்டாக்குகிறதா? ரகசிய நடவடிக்கைகளின் ஆதாரத்தை பொதுவெளியில் வெளியிட்டு வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த முயல்கிறதா? பா.ஜ.க.வினர் தேர்தலில் வாக்குகளை பெற வீரர்களை அரசியல் தீவனமாக பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். #surgicalstrike