செய்திகள்

நக்சலைட்டுகள் நாசவேலை - சத்தீஸ்கரில் பாலத்தில் இருந்து சரக்கு ரயில்பெட்டிகள் கவிழ்ந்தன

Published On 2018-06-24 08:26 GMT   |   Update On 2018-06-24 08:26 GMT
சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியில் உள்ள ரெயில்வே பாதையை நக்சல்கள் சேதப்படுத்தியதால் அந்த தடத்தில் வந்த சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. #Chhattisgarh
ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து இரும்புத் தாது ஏற்றிக் கொண்டு விசாகப்பட்டினம் சென்ற சரக்கு ரயில் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய பாலத்தை கடக்கும்போது இஞ்சின் உட்பட 8 பெட்டிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.



இந்த விபத்து நள்ளிரவு 1 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல் அதிகாரி கம்லோசன் காஷியப் கூறுகையில், சிறிய ஓடையின் மீது அமைக்கப்பட்டிருந்த ரெயில் பாலத்தை நக்சலைட்டுகள் நாசப்படுத்தியதாகவும், அதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, விபத்து ஏற்பட்ட சுற்றுவட்டாரங்களில் நக்சலைட்டுகளை பிடிக்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். #Chhattisgarh
Tags:    

Similar News