செய்திகள்

கடத்தி கொல்லப்பட்ட ராணுவ வீரரின் குடும்பத்துக்கு ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் ஆறுதல்

Published On 2018-06-20 10:38 GMT   |   Update On 2018-06-20 10:38 GMT
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கடத்தி கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் அவுரங்கசீப்பின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் ஆறுதல் கூறினார். #NirmalaSitharaman #JammuKashmir #Aurangzeb
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்த வீரர் அவுரங்கசீப். இவர் ரம்ஜான் விடுமுறை அன்று தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்போது அவரை துப்பாக்கி முனையில் கடத்திய பயங்கரவாதிகள், பின் அவரை சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.



இந்நிலையில், உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தினரை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதுகுறித்து பேசிய அவர், ராணுவ வீரரின் குடும்பத்தினருடைய பொறுமையும், தைரியமும் பிரமிக்க வைப்பதாகவும், மறைந்த ராணுவ வீரர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒட்டுமொத்த நாட்டுக்கும் முன் உதாரணமாக விளங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் இந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. #NirmalaSitharaman #JammuKashmir #Aurangzeb
Tags:    

Similar News