செய்திகள்

டெல்லியில் பட்டப்பகலில் ரவுடிகள் மோதல் - 3 பேர் சுட்டுக்கொலை

Published On 2018-06-18 21:46 GMT   |   Update On 2018-06-18 21:46 GMT
டெல்லியின் புராரி பகுதியில் பட்டப்பகலில் இரு ரவுடி கும்பல் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு அப்பாவி பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். #DelhiGangWar

புதுடெல்லி:

டெல்லியின் புராரி பகுதியில் நேற்று காலை சுமார் 10.30 மணியளவில் காரில் வந்த சிலர் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த சிலரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதையடுத்து அந்த கூட்டத்தில் இருந்தவர்கள் அப்பகுதியில் இருந்து தப்பியோட முயற்சித்தனர்.

இந்த தூப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிப்பட்டனர். துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 3 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவரும் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்கள் பதிவாகி இருந்தன. அந்த வீடியோ பதிவுகள் தற்போது இணைய தளத்தில் பரவி வருகின்றன.
Tags:    

Similar News