செய்திகள்

இந்தியாவில் நிலவும் கடும் வறட்சி - ஆண்டிற்கு 2 லட்சம் பேர் இறப்பதாக அதிர்ச்சி தகவல்

Published On 2018-06-15 11:53 GMT   |   Update On 2018-06-15 11:53 GMT
இந்தியாவில் நிலவும் கடும் வறட்சியால் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் ஆண்டிற்கு 2 லட்சம் பேர் இறப்பதாக ஆய்வில் கிடைத்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #NitiAayog
புதுடெல்லி:

இந்தியாவில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து மத்திய அரசின் நிதி ஆயக் குழு ஆய்வு நடத்தியது. ஆய்வின் முடிவில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

இந்தியாவில் ஆண்டுக்கு நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. அறிக்கையின் படி பல முக்கிய நகரங்களில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நிலத்தடி நீர் தட்டுப்பாடு ஏற்படும். அடுத்த 10 ஆண்டுகளில் குடிநீர் தட்டுப்ப்பாடு இரண்டு மடங்காகும்.

தற்சமயம் 600 மில்லியன் இந்தியர்கள் கடுமையான நீர் பற்றாக்குறையால் தவிக்கின்றனர். சுத்தமான குடிநீர் கிடைக்காமல் ஆண்டிற்கு 2 லட்சம் பேர் பலியாகின்றனர். தண்ணீர் பற்றாக்குறை மாநிலத்திற்கு, மாநிலம் வேறுபடுகிறது. அம்மாநிலத்தின் நீர் மேலாண்மை, நிலத்தடி நீர் சேமிப்பு, பாசனமுறை மற்றும் குடிநீர் மேலாண்மை போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இது கணக்கிடப்படுகிறது.


நீர் தட்டுப்பாடு இந்தியாவில் மட்டும் ஏற்பட வில்லை. உலகின் பல நாடுகள் நீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் எதிர்காலத்தில் கடும் வறட்சி ஏற்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தவறினால் மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். #NitiAayog


Tags:    

Similar News