செய்திகள்

பாராளுமன்ற தேர்தலுக்குள் கங்கை, யமுனை நதிகள் தூய்மையாக்கப்படும்- நிதின் கட்கரி

Published On 2018-06-14 16:45 GMT   |   Update On 2018-06-14 16:45 GMT
2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்குள் கங்கை, யமுனை நதிகள் முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்டு விடும் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறியுள்ளார். #NitinGadkari
புதுடெல்லி:

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது, கங்கை, யமுனை நதிகள் தூய்மை ஆக்கப்படும் என்று பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்கரி கூறியதாவது:

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையின் படி, இந்தியாவின் மிகவும் முக்கிய நதிகளான கங்கை, யமுனை நதிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்து உள்ளது.

மேலும் 20 சதவீத பணிகள் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகள் முடிவடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கங்கை மற்றும் யமுனை நதிகளின் கிளை நதிகளையும் தூய்மை படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. 2019-ம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுக்குள் பணிகள் முழுவதும் முடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #NitinGadkari #YamunaRiver #GangaRiver
Tags:    

Similar News