செய்திகள்

பிரணாப் முகர்ஜி தனது முடிவை மறு பரிசீலனை செய்யவேண்டும் - மகள் கோரிக்கை

Published On 2018-06-07 07:22 GMT   |   Update On 2018-06-07 07:22 GMT
பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். நிகர்ழ்ச்சியில் பங்கேற்கும் முடிவை மறு பரிசீலனையில் செய்ய வேண்டும் என்று அவரது மகளும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான ‌ஷர்மிஸ்தா முகர்ஜி தெரிவித்துள்ளார். #PranabMukherjee #SharmisthaMukherjee
புதுடெல்லி:

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நாக்பூரில் உள்ள தங்களது தலைமை அலுவலகத்தில் 3 நாள் நடைபெறும் விழாவில் உரையாற்ற வருமாறு அழைப்பு விடுத்தது.

இந்த அழைப்பை ஏற்று பிரணாப் முகர்ஜி இன்று ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் முன்பு உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அவரிடம் வலியுறுத்தினர்.

இது குறித்து பிரணாப் முகர்ஜி கூறும் போது, “நான் என்ன சொல்ல வேண்டுமோ? அதை நாக்பூர் விழாவில் சொல்கிறேன். ஆர்.எஸ்.எஸ். விழாவில் பங்கேற்க கூடாது என வலியுறுத்தி எனக்கு ஏராளமான கடிதங்களும், தொலைபேசி அழைப்புகளும் வந்துள்ளன. ஆனால் நான் யாருக்கும் பதில் அளிக்கவில்லை. நான் பேச வேண்டிய அனைத்தையும் நாக்பூரில் பேசுவேன்” என்றார். ஆர்.எஸ்.எஸ். விழாவில் பங்கேற்பதற்காக அவர் நேற்று நாக்பூர் சென்றார்.


இதற்கிடையே பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு அவரது மகளும், டெல்லி காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான ‌ஷர்மிஸ்தா முகர்ஜி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பா.ஜனதாவில் இணைந்ததாக வதந்தி பரவிய செய்தியாலும் கோபம் அடைந்தார். இதைத் தொடர்ந்து ‌ஷர்மிஸ்தா முகர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை வைத்து பா.ஜனதா இப்படி பொய்யான செய்திகளை பரப்பும். நிகழ்ச்சியில் பிரணாப் என்ன பேசினார் என்பது மறக்கப்பட்டு, அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை மட்டுமே வைத்து பொய்யான செய்திகளையும், தகவல்களையும் பா.ஜனதா பரப்பும். அதற்கான வாய்ப்பை நீங்கள் (பிரணாப் முகர்ஜி) அளிக்கிறீர்கள். இதனால் பிரணாப் தனது முடிவை பரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #PranabMukherjee #SharmisthaMukherjee
Tags:    

Similar News