செய்திகள்

ம.பி.யில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி - ராகுல் அறிவிப்பு

Published On 2018-06-06 09:58 GMT   |   Update On 2018-06-06 09:58 GMT
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் 10 நாட்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். #MPFarmersloanwaival #Rahul
இந்தூர்:

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மாநிலம் தழுவிய அளவில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது மன்ட்சவுர் மாவட்டத்தில் வெடித்த வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.

இந்த துயர சம்பவத்தை முதலாண்டு துக்க தினமாக இன்று அம்மாநில விவசாயிகள் அனுசரித்து வருகின்றனர். இதையொட்டி, மன்ட்சவுர் மாவட்டம், பிப்லியா மன்டி பகுதியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.



மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு காரணமான போலீஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த மேடையில் ஜோதிராதித்யா சிந்தியா, மத்தியப்பிரதேசம் மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் போன்றவர்கள் அமர்ந்துள்ளனர். வரும் நவம்பர் மாதம் நடைபெறும் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் 10 நாட்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். #MPFarmersloanwaival #Rahul

Tags:    

Similar News