செய்திகள்

காஷ்மீரில் பயங்ரவாதிகள் தாக்குதலில் பெண் உட்பட 5 பேர் காயம்

Published On 2018-06-02 14:24 GMT   |   Update On 2018-06-02 14:24 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று பயங்ரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த இரு வீரர்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் இன்று பிற்பகல் மத்திய துணை ராணுவப் படையினர் வழக்கம்போல் வாகனங்களில் சென்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, இங்குள்ள ஃபத்தேக்டல் பகுதியில் ரோந்துப் படையினர் வந்தபோது மறைந்திருந்த சில பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், மத்திய துணை ராணுவப் படையை சேர்ந்த இரு வீரர்கள், ஒரு பெண் உட்பட 5 பேர் காயமடைந்தனர். #Srinagargrenadeattack
Tags:    

Similar News