செய்திகள்

குடிநீர் பற்றாக்குறையால் தவித்த மாணவர்களிடம் வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி

Published On 2018-05-25 18:00 IST   |   Update On 2018-05-25 18:00:00 IST
மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் போது குடிநீர் பற்றாக்குறையால் தவித்த மாணவர்களிடம் பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்தார். #BangladeshBhavan #SantiNiketan #PMModi
கொல்கத்தா:

வங்காளதேச விடுதலைப் போரின்போது இந்தியா, வங்காளதேசம் தொடர்புடைய வரலாற்று ஆவணங்களை பாதுகாக்கவும், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை பிரதிபலிக்கும் வகையிலும் மிகப்பெரிய அரங்கம் அமைப்பதற்காக, பிர்பம் மாவட்டம் சாந்தி நிகேதன் பகுதியில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 35,000 சதுர அடி நிலத்தை மேற்கு வங்காளம் மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

அந்த இடத்தில் 25 கோடி ரூபாய் செலவில் வங்காளதேச பவன் என்ற பெயரில் புதிய அரங்கம் ஒன்றை அந்நாட்டு அரசு கட்டியுள்ளது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்திய பிரதமர் மோடி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா ஆகிய இருவரும் வங்காளதேச பவனை திறந்து வைத்தனர். விழாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியின் போது விஸ்வ பாரதி பல்கலைக்கழக வளாகத்தில் பட்டமளிப்பு விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,

நான் பட்டமளிப்பு விழா அரங்கத்தின் உள்ளே வரும் போது சில மாணவர்கள் குடிநீர் இல்லை என என்னிடம் புகார் அளித்தனர். பல்கலைக்கழகத்தின் வேந்தராக மாணவர்களுக்கு ஏற்பட்ட இந்த பிரச்சனைக்கு நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.

என பிரதமர் மோடி கூறினார். #BangladeshBhavan #SantiNiketan #PMModi
Tags:    

Similar News