செய்திகள்

உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேருக்கு வாட்ஸ் அப்பில் மிரட்டல்

Published On 2018-05-24 04:41 IST   |   Update On 2018-05-24 04:41:00 IST
உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 10 பேருக்கு கடந்த 2 நாட்களில் வாட்ஸ் அப்பில் மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து விசாரணை மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
லக்னோ:

உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 10 பேருக்கு கடந்த 2 நாட்களில் வாட்ஸ் அப்பில் ஒரே மாதிரியான குறுந்தகவல் வந்தது.

அதில், எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவரும் தலா ரூ.10 லட்சம் தர வேண்டும் என்றும், இல்லையென்றால் எம்.எல்.ஏ.க்களின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த எம்.எல்.ஏ.க்கள் 10 பேரும் உடனடியாக இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் சிறப்பு தனிப்படையை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் எம்.எல்.ஏ.க்களின் வாட்ஸ் அப்புக்கு வந்த மிரட்டல் குறுந்தகவல்கள் அனைத்தும் துபாயில் இருந்து வந்தாக கண்டறியப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தற்போது போலீசார் பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ளனர். 
Tags:    

Similar News