செய்திகள்

கர்நாடக தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் திருப்புமுனையாக அமையும் - யோகா குரு ராம்தேவ்

Published On 2018-05-14 22:35 GMT   |   Update On 2018-05-14 22:35 GMT
கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் ஒரு திருப்பு முனையாக இருக்கும் என யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார். #KarnatakaElection2018 #Ramdev
லக்னோ:

கர்நாடகா மாநில சட்டசபைக்கு கடந்த சனிக்கிழமை நடந்த தேர்தலில் 72.36 சதவீதம் வாக்குகள் பதிவானது. இதுவரை இந்த அளவுக்கு வாக்குகள் பதிவானதில்லை என்பதால் அங்கு ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பா.ஜ.க., காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவியது. கர்நாடகாவில் தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானால் 113 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த மேஜிக் நம்பரை எட்டப்போவது யார் என்பது பரபரப்பான சஸ்பென்சாக உள்ளது.



இந்நிலையில், கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் ஒரு திருப்பு முனையாக இருக்கும் என யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் கட்சிக்கு தான் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பு ஏற்படும்.

இந்த தேர்தலில் பாஜக நிச்சயம் வென்று தென்னிந்தியாவில் ஆட்சி அமைக்கும். கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் ஒரு திருப்பு முனையாக இருக்கும் என தெரிவித்துள்ளார். #KarnatakaElection2018 #Ramdev
Tags:    

Similar News