செய்திகள்

ஆண் வாரிசுக்காக 2 மனைவிகள் மூலம் 9 குழந்தை பெற்ற மடாதிபதி

Published On 2017-11-02 09:55 GMT   |   Update On 2017-11-02 09:56 GMT
கர்நாடகா மாநிலத்தில் 82 வயதான மடாதிபதிக்கு 2-வது மனைவி மூலம் 9-வதாக ஆண் குழந்தை பிறந்ததால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் மடத்தில் உள்ளவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கல்புராகி:

கர்நாடகா மாநிலம் வடக்கு பகுதியான கல்பு ராகி நகரை சேர்ந்தவர் ‌ஷரன பசப்பா அப்பா.

மடாதிபதியான இவருக்கு ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. கோவில் ஒன்றும் இருக்கிறது. அந்த மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த மடத்துக்கு ரூ.100 கோடி சொத்துக்கள் இருக்கிறது.

82 வயதான மடாதிபதி ‌ஷரன பசப்பாவுக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு 5 மகள்களும், 2-வது மனைவிக்கு 3 மகள்களும் உள்ளனர். அவருக்கு 8 மகள்கள் இருந்தாலும் ஆண் வாரிசு இல்லாமல் ஏக்கத்துடன் இருந்தார்.

இந்த நிலையில் 82 வயதில் அவருக்கு 9-வதாக ஆண் குழந்தை கிடைத்துள்ளது. 48 வயதான அவரது 2-வது மனைவிக்கு மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.


மடத்துக்கான வாரிசு பிறந்ததால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் மடத்தில் உள்ளவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து உறவினர் ஒருவர் கூறும்போது, ‌ஷரன பசப்பாவின் 2-வது மனைவிக்கு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம்’ என்றார்.
Tags:    

Similar News