செய்திகள்
ஆண் வாரிசுக்காக 2 மனைவிகள் மூலம் 9 குழந்தை பெற்ற மடாதிபதி
கர்நாடகா மாநிலத்தில் 82 வயதான மடாதிபதிக்கு 2-வது மனைவி மூலம் 9-வதாக ஆண் குழந்தை பிறந்ததால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் மடத்தில் உள்ளவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கல்புராகி:
கர்நாடகா மாநிலம் வடக்கு பகுதியான கல்பு ராகி நகரை சேர்ந்தவர் ஷரன பசப்பா அப்பா.
மடாதிபதியான இவருக்கு ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. கோவில் ஒன்றும் இருக்கிறது. அந்த மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த மடத்துக்கு ரூ.100 கோடி சொத்துக்கள் இருக்கிறது.
82 வயதான மடாதிபதி ஷரன பசப்பாவுக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு 5 மகள்களும், 2-வது மனைவிக்கு 3 மகள்களும் உள்ளனர். அவருக்கு 8 மகள்கள் இருந்தாலும் ஆண் வாரிசு இல்லாமல் ஏக்கத்துடன் இருந்தார்.
இந்த நிலையில் 82 வயதில் அவருக்கு 9-வதாக ஆண் குழந்தை கிடைத்துள்ளது. 48 வயதான அவரது 2-வது மனைவிக்கு மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.
மடத்துக்கான வாரிசு பிறந்ததால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் மடத்தில் உள்ளவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து உறவினர் ஒருவர் கூறும்போது, ஷரன பசப்பாவின் 2-வது மனைவிக்கு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம்’ என்றார்.
கர்நாடகா மாநிலம் வடக்கு பகுதியான கல்பு ராகி நகரை சேர்ந்தவர் ஷரன பசப்பா அப்பா.
மடாதிபதியான இவருக்கு ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. கோவில் ஒன்றும் இருக்கிறது. அந்த மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த மடத்துக்கு ரூ.100 கோடி சொத்துக்கள் இருக்கிறது.
82 வயதான மடாதிபதி ஷரன பசப்பாவுக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு 5 மகள்களும், 2-வது மனைவிக்கு 3 மகள்களும் உள்ளனர். அவருக்கு 8 மகள்கள் இருந்தாலும் ஆண் வாரிசு இல்லாமல் ஏக்கத்துடன் இருந்தார்.
இந்த நிலையில் 82 வயதில் அவருக்கு 9-வதாக ஆண் குழந்தை கிடைத்துள்ளது. 48 வயதான அவரது 2-வது மனைவிக்கு மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.
மடத்துக்கான வாரிசு பிறந்ததால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் மடத்தில் உள்ளவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து உறவினர் ஒருவர் கூறும்போது, ஷரன பசப்பாவின் 2-வது மனைவிக்கு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம்’ என்றார்.