இந்தியா

இந்திய சிறைச்சாலைகளில் ஒவ்வொரு ஆண்டும் 170 இயற்கைக்கு மாறான மரணங்கள் - அறிக்கையில் பகீர்

Published On 2025-08-06 02:15 IST   |   Update On 2025-08-06 02:15:00 IST
  • அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் 2016 இல் பதிவாகியுள்ளன.
  • கடந்த 5 ஆண்டுகளில் சிறைகளில் தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளதாகவும் அறிக்கை காட்டுகிறது.

இந்திய சிறைச்சாலைகளில் 2014 முதல் 2022 வரை ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 170 இயற்கைக்கு மாறான மரணங்கள் பதிவாகின்றன .

தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) வெளியிட்ட கடைசி சிறைச்சாலை புள்ளிவிவர அறிக்கையில்இது தெரியவந்துள்ளது.

2014 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில், சிறையில் 1521 பேர் மர்மமான சூழ்நிலையில் இறந்தனர். இதில் 70 சதவீதம் தற்கொலைகள். அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் 2016 இல் பதிவாகியுள்ளன. அந்த ஆண்டில் 231 பேர் இருந்துள்ளனர். இதில் 102 தற்கொலைகள்.

அதேபோல் 2022 இல்பதிவு செய்யப்பட்ட 159 இயற்கைக்கு மாறான மரணங்களில், அதில் 119 தற்கொலைகள் ஆகும்.

கடந்த 5 ஆண்டுகளில் சிறைகளில் தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளதாகவும் அறிக்கை காட்டுகிறது.

கைதிகளின் மனநலப் பிரச்சனைகள் போதுமான அளவு கவனிக்கப்படவில்லை என்றும், சிறைகளில் போதுமான மனநல மருத்துவர்கள் இல்லை என்றும்  சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

Tags:    

Similar News