இந்தியா

இமாச்சல பிரதேசத்தில் வெள்ளம்: கனமழையில் சிக்கி கடந்த ஒரு வாரத்தில் 17 பேர் பலி

Published On 2025-06-30 00:58 IST   |   Update On 2025-06-30 19:03:00 IST
  • இமாச்சல பிரதேசத்தில் 17 பேர் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தனர்.
  • மழை வெள்ளத்தால் 300 கோடி ரூபாய் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

சிம்லா:

இமாச்சல பிரதேசத்தில் நடப்பு ஆண்டில் முன்கூட்டியே பருவமழை பெய்ய தொடங்கியது. இதனால் மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், வருவாய், தோட்டக்கலை மற்றும் பழங்குடி வளர்ச்சித்துறை மந்திரி ஜெகத் சிங் நேகி கூறியதாவது:

இமாச்சல பிரதேசத்தில் கடந்த ஒரு வாரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கனமழையால் பல்வேறு பகுதிகளிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நிலச்சரிவுகள், வெள்ள நீர் தேக்கம் மற்றும் மின் இணைப்பு, சாலை இணைப்பு போன்றவையும் பாதிக்கப்பட்டன.

சமீபத்தில் தரம்சாலாவில் வெள்ளத்தில் 9 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். மழை வெள்ளத்தால் சுமார் 300 கோடி அளவுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News