செய்திகள்
மார்க் ஜூக்கர்பர்க்

அது வெறும் டீசர் தான் - மார்க் பதிவிட்டதாக வைரலாகும் பதிவு

Published On 2021-10-08 12:50 GMT   |   Update On 2021-10-08 12:50 GMT
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் பதிவிட்டதாக பகீர் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


அக்டோபர் 4 ஆம் தேதி உலகம் முழுக்க பேஸ்புக் உள்பட அந்நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற செயலிகள் முடங்கி போயின. இந்த நிலையில், பேஸ்புக் சேவை ஏழு நாட்களுக்கு முடக்கப்படுவதாக கூறும் தகவல் அடங்கிய பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரல் பதிவில் 'பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் சேவைகள் 168 மணி நேரம் (7 நாட்கள்) முடங்க போகிறது. இந்த இடையூறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் அக்கறை செலுத்துவோரிடம் தொடர்பில் இருக்க எங்கள் சேவையை எவ்வாறு சார்ந்து இருக்கிறீர்கள் என தெரியும். நாங்கள் மேம்பாட்டு பணிகளை அக்டோபர் 6, 2021 1300 மணிக்கு துவங்க இருக்கிறோம்' என மார்க் ஜூக்கர்பர்க் பதிவிட்டதாக ஸ்கிரீன்ஷாட் இடம்பெற்று இருக்கிறது.



வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், அது மார்பிங் செய்யப்பட்ட ஒன்று என தெரியவந்துள்ளது. உண்மையில் மார்க் ஜூக்கர்பர்க் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஏழு நாட்களுக்கு சேவைகள் நிறுத்தப்படுவதாக கூறும் தகவல் எதுவும் பதிவாகவில்லை. மேலும் வைரல் ஸ்கிரீன்ஷாட்களில் எழுத்துப்பிழை இடம்பெற்று இருக்கிறது.

அந்த வகையில் பேஸ்புக் மற்றும் அந்நிறுவன சேவைகள் நிறுத்தப்படுவதாக கூறி வைரலாகும் தகவல்களில் உண்மையில்லை என்றும் மார்க் ஜூக்கர்பர்க் இவ்வாறு எந்த பதிவையும் மேற்கொள்ளவில்லை என்பதும் உறுதியாகிவிட்டது.
Tags:    

Similar News