செய்திகள்

வாக்கு எண்ணிக்கை தினத்தன்று டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு

Published On 2019-05-21 09:07 GMT   |   Update On 2019-05-21 09:07 GMT
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தினமான மே 23-ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ உத்தரவிட்டு உள்ளார்.
சென்னை:

பாராளுமன்ற தேர்தல் தமிழகம் உள்பட நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. ஏழு கட்டமாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் 23ம் தேதி எண்ணப்பட உள்ளன.



இந்நிலையில், தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தினமான மே 23-ம் தேதி அன்று இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ உத்தரவிட்டு உள்ளார்.
Tags:    

Similar News