பெரம்பூர் தொகுதியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் வாக்குறுதி
சென்னை:
பெரம்பூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் சேர்ந்து வீதி வீதியாக ஆதரவு திரட்டி வருகிறார்.
45-வது வட்டத்தில் நடந்து சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். கலைஞர் விட்டு சென்ற பணிகளை கடமை தவறாமல் நிறைவேற்ற தயாராக இருக்கும் தலைவர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கேட்டுக்கொண்டார்.
பெரம்பூர் தொகுதியின் வளர்ச்சிக்கு என்னென்ன திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்பதை ஆய்வு செய்து அதனை படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என ஆர்.டி.சேகர் உறுதியளித்தார்.
வேட்பாளருடன் மாவட்ட செயலாளர் சுதர்சனம், பொறுப்பாளர்கள் வைத்திய லிங்கம், பாலவாக்கம் சோமு, முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன், பகுதி செயலாளர் ஜெயராமன், வட்ட செயலாளர் மாரிமுத்து மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்றனர். #LokSabhaElections2019