செய்திகள்

மதுரையில் பறக்கும்படை சோதனையில் ரூ.7¼ லட்சம் பறிமுதல்

Published On 2019-03-26 05:38 GMT   |   Update On 2019-03-26 05:38 GMT
மதுரையில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.7 லட்சத்து 34 ஆயிரத்து 330 சிக்கியது. #LSPolls

மதுரை:

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு தொகுதியிலும் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

மதுரை மாநகர பறக்கும் படை தாசில்தார் பிரபாகரன் தலைமையிலான குழுவினர் ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த வேனை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதனை சோதனை செய்தபோது 10 பண்டல்களில் ரூ.7 லட்சத்து 34 ஆயிரத்து 330 இருந்தது தெரியவந்தது. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் சுப்பிரமணியபுரத்தில் உள்ள பீடி கம்பெனி ஊழியர்களுக்கு சம்பள பட்டுவாடா செய்வதற்காக கொண்டு வரப்பட்ட பணம் என தெரியவந்தது. இருப்பினும் ஆவணங்களை சமர்ப்பிக்காததால் அந்த பணம் கலெக்டர் அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது. #LSPolls

Tags:    

Similar News