செய்திகள்

மக்கள் நீதி மய்ய கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு

Published On 2019-03-22 08:21 GMT   |   Update On 2019-03-22 08:21 GMT
திண்டுக்கல்லில் அனுமதி பெறாமல் நடத்த முயன்ற மக்கள் நீதி மய்ய கூட்டத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். #LSPolls #MakkalNeedhiMaiam
திண்டுக்கல்:

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் டாக்டர் சுதாகர் போட்டியிடுகிறார். இதனையொட்டி அக்கட்சி சார்பில் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளிடம் ஆலோசனை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

தனியாருக்கு சொந்தமான ஒரு இடத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அங்கு நிர்வாகிகள் ஒன்று கூடினர். இது குறித்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

கூட்டத்துக்கு முறையாக அனுமதி பெற வேண்டும் எனவும், கொடி கம்பங்கள் ஊன்றுதல், மைக் செட் போடுதல் என அனைத்துக்கும் உரிய அனுமதி பெற வேண்டும் எனவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து அந்த கூட்டத்துக்கு எவ்விதமான அனுமதியும் வாங்கவில்லை என தெரிய வரவே அதனை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து கூட்டத்துக்கு வந்த நிர்வாகிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். #LSPolls #MakkalNeedhiMaiam
Tags:    

Similar News