செய்திகள்

பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் - தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2019-03-18 09:14 GMT   |   Update On 2019-03-18 09:14 GMT
பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #TamilisaiSoundararajan #BJP

ஆலந்தூர்:

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவா முதல்வரும் முன்னாள் ராணுவ மந்திரியுமான மனோகர் பாரிக்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். அவரின் மறைவு நாட்டிற்கு பெரிய இழப்பு. அவரது மறைவு காரணமாக பா.ஜனதா பாராளுமன்ற குழு கூட்டம் நாளைக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது.

நாளைய தினம் நடைபெறும் பா.ஜனதா பாராளுமன்ற குழு கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும். அதன்பின்பு வேட்பாளர்கள் பட்டியல் நாளைய தினமே வெளியிடப்படும்.

காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி தோல்வி கூட்டணி. எங்கள் பிரச்சாரம் மக்களை நேரில் சந்திக்கும் பிரசாரமாக இருக்கும்.

சவுகிதார் என்றால் மக்களின் காவலன் என்று அர்த்தம் . மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எடுத்துக்காட்டுக்காக இந்த பெயர் இடம்பெற்றுள்ளது. எனவே பிரதமர் மோடி மக்களின் காவலன், மக்களுக்கு சேவை செய்பவர்.

தூத்துக்குடியில் போட்டியிடுவீர்களா? என்று கேட்கிறீர்கள்.கட்சி எங்கு நிற்க சொல்கிறதோ அங்கு நிற்பேன். கட்சியின் விருப்பம் தான் என் விருப்பம்.

இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #BJP

Tags:    

Similar News