செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு?- மு.க. அழகிரி

Published On 2019-03-17 08:21 GMT   |   Update On 2019-03-17 08:38 GMT
மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க. அழகிரி பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு என்பது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். #Parliamentelection #DMK #MKAzhagiri

மதுரை:

பாராளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மகனும், முன்னாள் மத்திய மந்திரியுமான மு.க.அழகிரி அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

பாராளுமன்ற தேர்தலில் அவரது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த மு.க.அழகிரியை இன்று நிருபர்கள் சந்தித்தனர்.

அப்போது அவரிடம் பாராளுமன்ற தேர்தலில் உங்களது நிலைப்பாடு என்ன? என்று கேட்டனர். அதற்கு அவர், அரசியல் நிலவரம், பாராளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து ஒருவாரம் கழித்து உங்களிடம் (நிருபர்களிடம்) நானே விரிவாக பேசுகிறேன் என்றார்.

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசன் மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் உங்களை சந்தித்து ஆதரவு கேட்பதாக கூறி உள்ளாரே? என்று மு.க.அழகிரியிடம் கேட்டபோது, மரியாதை நிமித்தமாக அவர் என்னை சந்தித்தால் சந்திப்பேன். அதில் தவறில்லை என்று கூறினார்.

தி.மு.க. வெற்றி குறித்து கேட்டபோது, இதுகுறித்து ஒரு வாரத்திற்கு முன்பே தெரிவித்து விட்டேன் என்றார். #Parliamentelection #DMK #MKAzhagiri

Tags:    

Similar News