செய்திகள்

தமிழக காங்கிரஸ் அலுவலகத்தில் நாளை முதல் 2 நாட்களுக்கு விருப்ப மனு விநியோகம்

Published On 2019-03-14 06:57 GMT   |   Update On 2019-03-14 06:57 GMT
தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு நாளை முதல் 2 நாட்களுக்கு விருப்ப மனுக்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #ParliamentElection #TamilNaduCongress
சென்னை:

பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 18-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன.



இந்நிலையில், காங்கிரஸ் அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் நாளை தொடங்க உள்ளது. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர், கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. #ParliamentElection #TamilNaduCongress
Tags:    

Similar News