உவரி அருகே சகோதரர் இறந்த துக்கத்தில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை
- கெனிஸ்டன் வீட்டில் இருந்த மண்எண்ணையை தலையில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
- சமீபத்தில் கெனிஸ்டனின் சகோதரர் தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
உவரி அருகே உள்ள கூடுதாழை அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் ஜோசப். இவரது மகன் கெனிஸ்டன்(வயது 28).
இவர் கடந்த 12-ந்தேதி வீட்டில் இருந்த மண்எண்ணையை தலையில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவர் அலறி துடித்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் ஓடி வந்து கெனிஸ்டன் உடல் மீது பரவிய தீயை அணைத்தனர்.
பின்னர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவரை சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், சமீபத்தில் கெனிஸ்டனின் சகோதரர் தற்கொலை செய்து கொண்டார். அவரது இழப்பை தாங்க முடியாமல் கடந்த சில நாட்களாக கெனிஸ்டன் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார் என்ற விபரம் தெரியவந்தது.
இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.