உள்ளூர் செய்திகள்

மணல் லாரி மோதி முறிந்த மின் கம்பம்.

மணல் லாரி மின் கம்பத்தில் மோதியதில் வாலிபர் படுகாயம்

Published On 2022-07-01 06:50 GMT   |   Update On 2022-07-01 06:50 GMT
  • பூங்குடி கிராமத்தில் சாலையோரம் உள்ள காளியம்மன் கோவில் அருகே உள்ள மின் கம்பத்தில் மோதியதில் மின் கம்பம் முறிந்து கீழே சாய்ந்தது.
  • தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பாலூரன்படுகை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வரும் மணல் குவாரி புத்தூர் நோக்கி தனியாருக்கு சொந்தமான லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது வரும் வழியில் பூங்குடி கிராமத்தில் சாலையோரம் உள்ள காளியம்மன் கோயில் அருகே உள்ள மின் கம்பத்தில் மோதியதில் மின் கம்பம் முறிந்து கீழே சாய்ந்தது.

அப்போது காளியம்மன் கோயில் முன்புறம் போடப்ப ட்டிருந்த கொட்டகை மீதும் லாரி மோதியதில் கொட்டகை கீழே விழுந்தது. இதில் கொட்டகை ஓரம் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த பூங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜேஷ் (25) என்பவர் மீதும் கீற்று கொட்டகை விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த ராஜேஷை சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். உரிய நேரத்தில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை நிறுத்தினர். இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News