உள்ளூர் செய்திகள்

கடலூர் முதுநகரில் பரபரப்பு கோவில் குளத்தில்பிணமாக மிதந்த வாலிபர் : கொலையா? போலீசார் விசாரணை

Published On 2023-02-01 07:00 GMT   |   Update On 2023-02-01 07:00 GMT
  • குளத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் மிதந்து கிடந்தார்.
  • வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்பு ரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடலூர்:

கடலூர் முதுநகர் பகுதியில் முத்துக்கு மாரசாமி கோவில் பின்பு றத்தில் குளம் உள்ளது. இக்குளத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் மிதந்து கிடந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர், ,பேரில் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குளத்தில் இறந்து கிடந்த உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் குளத்தில் இறந்த உடலை மீட்பதற்காக கடலூர் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாகு தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த நிலையில் இருந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்பு ரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்   

கடலூர் முதுநகர் போலீசார் விசார ணையில்,கடலூர் முதுநகர் நாராயணன் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் மகன் கலைமணி (வயது 23). கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற கலைமணி, மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரை அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். மேலும் கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வாலிபரை காணவில்லை என வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இன்று அதிகாலை அவர் வீட்டின் அருகில் உள்ள முத்துக்குமாரசாமி கோயில் பின்புறம் உள்ள குளத்தில் கலைமணி பிணமாக இருந்தது தெரிய வந்தது.     இந்த நிலையில் இறந்த கலைமணி 3 நாட்களுக்கு முன்பு வெளியில் சென்றவர் எப்படி குளத்தில் இறந்த நிலையில் கிடந்தார்? கொலையா? அல்லது தற்கொலையா? உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கடலூர் முதுநகரில் கோவில் அருகே குளத்தில் வாலிபர் பணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News