உள்ளூர் செய்திகள்

2 நாட்டு துப்பாக்கியுடன் வாலிபர் கைது

Published On 2022-07-01 09:48 GMT   |   Update On 2022-07-01 09:48 GMT
  • போலீசார் சம்பவயிடம் சென்று சோதனை செய்தனர். அப்போது செல்லப்பன் வீட்டில் 2 நாட்டு துப்பாக்கி, மருந்து பால்ஸ் குண்டு ஆகியவை இருந்தது தெரிய வந்தது.
  • போலீசார் நாட்டு துப்பாக்கி மற்றும் மருந்து பால்ஸ் குண்டு ஆகியவை பறிமுதல் செய்து செல்லப்பனை கைது செய்தனர்.

அந்தியூர்:

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி கால்வாரை பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் (32). இவர் வீட்டில் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக பர்கூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

போலீசார் சம்பவயிடம் சென்று சோதனை செய்தனர். அப்போது செல்லப்பன் வீட்டில் 2 நாட்டு துப்பாக்கி, மருந்து பால்ஸ் குண்டு ஆகியவை இருந்தது தெரிய வந்தது.

பின்னர் போலீசார் நாட்டு துப்பாக்கி மற்றும் மருந்து பால்ஸ் குண்டு ஆகியவை பறிமுதல் செய்து செல்லப்பனை கைது செய்தனர். மேலும் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News