உள்ளூர் செய்திகள்
- கார்த்தி மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
- கார்த்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் சாக்கோட்டை கீழத்தெருவை சேர்ந்தவர் கார்த்தி (வயது 41).
இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப்புக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் கலெக்டர் உத்தரவுப்படி, கார்த்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.