உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சியில் பிளஸ்-1 மாணவியின் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

Published On 2023-11-10 09:00 GMT   |   Update On 2023-11-10 09:00 GMT
  • சிறுமியின் தந்தையிடம் உன் மகளை நான் தான் கட்டுவேன் என மிரட்டல்.
  • மாணவியின் தந்தை பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமியை அவரது தந்தை மோட்டார் சைக்கிளில் பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து சென்றார்.

மோட்டார் சைக்கிள் கோட்டூர் ரோட்டில் சென்ற போது ஜோதி நகரை சேர்ந்த கூலித் தொழிலாளி சக்திவேல் (வயது 19) என்பவர் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினார். அவர் சிறுமியின் தந்தையிடம் உன் மகளை நான் தான் கட்டுவேன்.

உன்னால் என்ன பண்ண முடியுமோ அதை நீ பண்ணு என கூறி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து மாணவியின் தந்தை பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சிறுமியின் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த சக்திவேல் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News