உள்ளூர் செய்திகள்

இரும்பு பைப் திருடிய வாலிபர் கைது

Published On 2023-07-07 15:31 IST   |   Update On 2023-07-07 15:31:00 IST
  • 13 கிலோ கொண்ட இரும்பு பைப்புகளை ஒருவர் திருடினார்.
  • அங்கு வந்த லட்சுமிநாராயணன் உடனே அவரை பிடித்து மத்திகிரி போலீசில் ஒப்படைத்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள உப்பானூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன் (வயது31). இவர் பில்டிங் கான்டிராட் எடுத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் அச்சடெ்டி பகுதியில் ஜொல பெண்டா ரோடு சாலையில் கட்டிட வேலை நடந்து வருகிறது. அப்போது அந்த கட்டிடத்தில் 13 கிலோ கொண்ட இரும்பு பைப்புகளை ஒருவர் திருடினார்.

அப்போது அங்கு வந்த லட்சுமிநாராயணன் உடனே அவரை பிடித்து மத்திகிரி போலீசில் ஒப்படைத்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் இரும்பு பைப்புகளை திருடிய நபர் பழைய மத்திகிரியை சேர்ந்த சோமசேகர் (23) என்பது தெரியவந்தது. உடனே அவரை கைது செய்தனர். கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News