உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட விஜய்.

ஆடுகள் திருடிய இளைஞர் கைது

Published On 2022-11-07 07:34 GMT   |   Update On 2022-11-07 07:34 GMT
  • வீட்டின் அருகில் கொட்டகையில் ஆடுகளை அடைத்து வைத்துள்ளார்.
  • காலையில் ஆட்டுக்கொட்டகையில் சென்று பார்த்தபோது 2 ஆடுகள் திருட்டு.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த கோடியக்காட்டில் வசிப்பவர் ஜான்சுல்தான் (வயது 52).

இவர் ஆடு வளர்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் கொட்டகையில் ஆடுகளை அடைத்து வைத்து உள்ளார்.

காலையில் ஆட்டுக்கொட்டகையில் சென்று பார்த்தபோது அதில் 2 ஆடுகள் திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.

இது குறித்து வேதாரண்யம் காவல்நிலையத்தில் ஜான் சுல்தான் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் வழக்கு பதிவு கோடியக்காடு பகுதி விஜய் (வயது 22) என்பவரை கைது செய்தனர்.

தலைமறைவான கோடியக்காடு அஜீத் (22) என்பவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News