உள்ளூர் செய்திகள்

பைக்கை திருடிய வாலிபர் கைது

Published On 2023-07-31 15:10 IST   |   Update On 2023-07-31 15:10:00 IST
  • விடிந்து பார்த்ததும் அந்த மொபட்டை மர்ம நபர் திருடி சென்றுள்ளனர்.
  • இதைத்தொடர்ந்து போலீசார் வெங்கடேஷை கைது செய்தனர்.

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே தேவர்முக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கவுரிராஜன் (வயது40). விவசாயியான இவர் சம்பவத்தன்று இரவு தனது வீட்டின் முன்பு மொபட்டை நிறுத்தி இருந்தார். விடிந்து பார்த்ததும் அந்த மொபட்டை மர்ம நபர் திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து கவுரிராஜன் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் கும்பரனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (25) என்பவர் மொபட்டை திருடி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வெங்கடேஷை கைது செய்தனர்.

Tags:    

Similar News