உள்ளூர் செய்திகள்

பைக் திருடிய வாலிபர் கைது

Published On 2023-03-29 15:43 IST   |   Update On 2023-03-29 15:43:00 IST
  • கடந்த 25-ம் தேதி எம்.எஸ்.எம்.தோட்டம் அருகே பைக்கை நிறுத்திவிட்டு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தார்.
  • சதீஷ்குமார்(27) என்பவர் திருடி செல்லும் போது அவரை பிடித்து ஊத்தங்கரை போலீசில் ஒப்படைத்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஏக்கூர் பகுதியை சேர்ந்த திருப்பதி (வயது 37) இவர் அரசு பேருந்து கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 25-ம் தேதி எம்.எஸ்.எம்.தோட்டம் அருகே பைக்கை நிறுத்திவிட்டு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இவர் பைக்கை போச்சம்பள்ளி அருகே உள்ள அந்தேரிப்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார்(27) என்பவர் திருடி செல்லும் போது அவரை பிடித்து ஊத்தங்கரை போலீசில் ஒப்படைத்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News