உள்ளூர் செய்திகள்
வாசுதேவநல்லூரில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
- வாசுதேவநல்லூர் பஜாரில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
- மாயசுடலை, கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. போலீசார், அவரிடம் இருந்து 110 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் ரோந்த சென்றனர். அப்போது பஜாரில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
அவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது அவர் அதே பகுதியை சேர்ந்த மாயசுடலை(வயது 21) என்பதும், கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 110 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.