உள்ளூர் செய்திகள்
புதுக்கோட்டையில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது
- அன்பு ராஜா என்பவர் கிருஷ்ணனை வழி மறித்து அவரது சட்டை பையில் இருந்து பணத்தை பறிக்க முயன்றுள்ளார்.
- அதனை கிருஷ்ணன் தடுத்ததால் அவரை அரிவாளால் வெட்ட முயன்றதுடன் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி புதுக்கோட்டை ராஜூவ் நகரை சேர்ந்தவர் கிருஷ் ணன் (வயது 62). இவர் சம்பவத்தன்று புதுக் கோட்டை சாலை யில் வரும்போது குலையன் கரிசலை சேர்ந்த அன்பு ராஜா( 31) என்பவர் வழி மறித்து கிருஷ்ணனின் சட்டை பையில் இருந்து பணத்தை பறிக்க முயன்றுள்ளார்.
அதனை கிருஷ்ணன் தடுத்ததால் அவரை அரிவாளால் வெட்ட முயன்றதுடன் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்குப்பதிவு செய்து அன்புராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.