உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவில் அருகே பெண்ணை கற்பழித்த வாலிபர் கைது

Published On 2022-10-27 14:00 IST   |   Update On 2022-10-27 14:00:00 IST
  • சங்கரன்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 41 வயது பெண்.
  • சம்பவத்தன்று மலையன்குளம் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 41 வயது பெண். சம்பவத்தன்று சங்கரன்கோவில் அருகே மலையன்குளம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த திருவேங்கடம் அருகே உள்ள பி.ஆலங்குளத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான விஜயதுரை என்ற ரோப்(வயது 31) என்பவர் அந்த பெண்ணை அங்குள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் அவரை கற்பழித்த விஜயதுரை, நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். உடனே அவர்கள் சங்கரன்கோவில் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விஜயதுரையை கைது செய்தனர்.

Tags:    

Similar News