உள்ளூர் செய்திகள்
சிங்காநல்லூரில் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்த வாலிபர் கைது
- ஏ.டி.எம். மையத்துக்குள் வாலிபர் ஒருவர் நுழைந்தார்.
- போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரத்தில் தனியார் வங்கி கிளைக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் வாலிபர் ஒருவர் நுழைந்தார்.
அவர் இரும்பு கம்பியால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றார் . இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொண்டிருந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் புளியகுளத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஆனந்தன்(வயது39) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.