உள்ளூர் செய்திகள்

மனைவியின் வளைகாப்பிற்கு உறவினர்களை அழைக்காததால் வாலிபர் தற்கொலை

Published On 2023-04-01 09:33 GMT   |   Update On 2023-04-01 09:33 GMT
  • களக்காடு அருகே உள்ள மலையடிபுதூர் பருத்திவிளை தெருவை சேர்ந்தவர் அசோக் (வயது25).
  • இவர் கடந்த 1 ஆண்டுக்கு முன் சென்னையில் உள்ள பழக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

களக்காடு:

களக்காடு அருகே உள்ள மலையடிபுதூர் பருத்திவிளை தெருவை சேர்ந்தவர் அசோக் (வயது25).

இவர் கடந்த 1 ஆண்டுக்கு முன் சென்னையில் உள்ள பழக்கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கும், சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் காவியபிரியாவுக்கும் காதல் ஏற்பட்டது.

இதைதொடர்ந்து அசோக், காவியபிரியாவை அழைத்துக் கொண்டு ஊருக்கு வந்தார். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடந்தது.

இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன் அசோக்கிற்கும், அவரது மனைவி காவியபிரியா விற்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை யில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். இதற்கிடையே கர்ப்பிணி யான காவியபிரியாவிற்கு கடந்த 23-ந் தேதி வளைகாப்பு விழா நடந்தது. இதற்கு அசோக்கின் உறவினர்களை அழைக்கவில்லை.

இதுகுறித்து அவர் மனைவியிடம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் மனம் உடைந்த அசோக் கடந்த 26-ந் தேதி விஷம் குடித்தார். உறவினர்கள் அவரை மீட்டு களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் நாகர்கோ வில் தனியார் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று மாலை இறந்தார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News